search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தரமற்ற உணவு"

    • தரமற்ற உணவுகள் ஓட்டல்களில் விநியோகிப்பதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
    • ஆய்வின்போது 8 ஓட்டல்களில் கெட்டுப்போன சட்னி, மோர், உணவுகள் பொதுமக்களுக்கு வழங்கியது தெரியவந்தது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் தரமற்ற உணவுகள் ஓட்டல்களில் விநியோகிப்பதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி கதிரவன் தலைமையில் அதிகாரிகள் மாவட்ட முழுவதும் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 39 ஓட்டல்களில் உணவு பரிசோதனை செய்யப்பட்டது.

    இதில் 8 ஓட்டல்களில் கெட்டுப்போன சட்னி, மோர், உணவுகள் பொதுமக்களுக்கு வழங்கியது தெரியவந்தது. இதையடுத்து அந்த ஓட்டல்களுக்கு ரூ.12 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    மேலும் இதுேபான்று சோதனை தொடரும் என்றும், தரம் இல்லாத உணவுகள் ஓட்டல்களில் வைக்கப்பட்டால் கடைக்கு சீல் வைக்கப்படும் என்றும் வழக்குப் பதிவு செய்து உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

    • தமிழ், ஆங்கிலத்தில் அளிக்க நடவடிக்கை
    • நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்பட்டு புகார்தாரருக்கு ஆய்வறிக்கை அளிக்கப்படும்

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    மக்களின் அன்றாட தேவைகளில் அவசிய மானதாக விளங்கும் உணவுப்பொருட்களின் தரம் மற்றும் பாதுகாப்பினை உறுதி செய்திடவும், தரமற்ற மற்றும் கலப்பட உணவுகள் குறித்த பொதுமக்கள் தங்கள் புகார்களை ஆன்லைன் வழியாக மற்றும் செல்போன் வாயிலாக புகார் தெரிவிக்கலாம்.

    இதற்காக புதிய இணையதளம் foodsafety.tn.gov.in மற்றும் தமிழ்நாடுஉணவு பாதுகாப்பு துறையின் நுகர்வோர் புகார் செயலி தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

    இச்செயலி வாயிலாக பொதுமக்கள் தங்கள் புகார்களை மிக எளிமையாக தமிழ் அல்லது ஆங்கிலத்தில் அளிக்கலாம்.

    மேலும் இந்த இணைய தளத்தில் பொதுமக்கள் தங்களது புகார்களை புதிய இணையதளம் மற்றும் ஆப் பதிவிறக்கம் செய்து டைப் ஏதும் செய்யாமல் மிக எளிமையாக விவரங்களை தேர்ந்தெடுக்கும் வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

    பொதுமக்கள் தரமற்ற உணவு, கலப்பட செய்யப்பட்ட உணவு உள்ளிட்ட புகார்கள் குறித்த விவரங்களை இதற்கான இணையதளம் மூலமும், கைபேசிசெயலி மூலமும் தெரிவிக்கலாம்.

    மேலும் புகார் அளித்த 24 முதல் 48 மணி நேரத்திற்குள் ஆய்வு நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்பட்டு புகார்தாரருக்கு ஆய்வறிக்கை அளிக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • போடியில் பஸ் நிலையம் மற்றும் நகரின் முக்கிய பகுதிகளில் தேனி மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
    • இந்த அதிரடி ஆய்வில் அனைத்து கடைகளிலும் சுமார் 49 மாதிரிகள் எடுக்கப்பட்டு அவற்றில் ஏழு மாதிரிகளில் தரமற்ற கலப்பட ரசாயனங்கள் கலந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு எச்சரிக்கப்பட்டது.

    மேலசொக்கநாதபுரம்:

    போடியில் பஸ் நிலையம் மற்றும் நகரின் முக்கிய பகுதிகளில் தேனி மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் ராகவன் உத்தரவின் படி போடி உணவு பாதுகாப்பு அலுவலர் சரண்யா தலைமையில் கம்பம், உத்தமபாளையம் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    இந்த ஆய்வில் பஸ் நிலையத்தில் உள்ள கடைகளில் கலர் ரசாயனம் சேர்க்கப்பட்ட உணவுப் பொருள்கள், முகவரி இல்லாமல் தயாரிக்கப்பட்ட உணவுப் பொருள்கள் போன்றவை சுமார் 22 கிலோ அளவில் கைப்பற்றப்பட்டு அவைகள் அழிக்கப்பட்டது.

    மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இந்தக் கடைகளில் முதல் முறை என்பதால் அனைவரையும் உணவு பாதுகாப்புத் துறையினர் எச்சரிக்கை செய்தனர்.

    பஸ் நிலையத்தில் முக்கிய பகுதியில் அமைந்துள்ள கடை ஒன்றில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டு ரூ.5000 அபராதம் விதிக்கப்பட்டது.

    போடி கீழத்தெரு மின்வாரிய அலுவலகம் செல்லும் சாலையில் அமைந்துள்ள தனியார் டீக்கடை ஒன்றில் உணவு பதார்த்தங்கள் தரம் இல்லாமல் தயாரிப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில் அங்கு தீவிர ஆய்வு மேற்கொண்டனர்.

    அங்கு கைப்பற்றப்பட்ட எண்ணை பதார்த்தங்கள் உடனடியாக நடமாடும் உணவு ஆய்வு வண்டி மூலம் ஆய்வு செய்யப்பட்டது. அதில் தடை செய்யப்பட்ட கலர் ரசாயனங்கள் கலந்து இருப்பதைக் கண்டு தயாரிக்கப்பட்ட சுமார் ரூ.5 ஆயிரம் மதிப்புடைய எண்ணை பொருட்கள் அனைத்தும் குப்பையில் கொட்டப்பட்டது.

    மீண்டும் இது போல் தவறு நடந்தால் கடைக்கு சீல் வைக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டது.

    இந்த அதிரடி ஆய்வில் அனைத்து கடைகளிலும் சுமார் 49 மாதிரிகள் எடுக்கப்பட்டு அவற்றில் ஏழு மாதிரிகளில் தரமற்ற கலப்பட ரசாயனங்கள் கலந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு எச்சரிக்கப்பட்டது.

    பெங்களூருவில் உள்ள இந்திய ஹாக்கி அணி வீரர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் பூச்சி, முடி இருந்ததாக பயிற்சியாளர் ஹரேந்திர சிங் குற்றம் சாட்டியுள்ளார். #HockeyIndia
    பெங்களூரு:

    இந்திய ஆண்கள் ஹாக்கி அணி நெதர்லாந்தில் இந்த மாதம் 23-ல் தொடங்க உள்ள சாம்பியன்ஸ் டிராபியில் விளையாட இருக்கிறது. அதற்காக பெங்களூருவில் உள்ள ஸ்போர்ட்ஸ் அகாடமியில் பயிற்சியில் ஈடுபட்டு உள்ளனர்.

    இந்நிலையில், வீரர்களுக்கு வழங்கப்படும் உணவு தரமற்றதாக இருப்பதாக அணியின் தலைமை பயிற்சியாளர் ஹரேந்திர சிங் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து இந்திய ஒலிம்பிக் அசோசியேசன் தலைவர் நரேந்தர் பத்ராவிற்கு எழுதிய கடிதத்தில், பெங்களூரு எஸ்.ஏ.ஐ. மையத்தில் வழங்கப்படும் உணவு தரமற்றதாக இருக்கிறது. உணவில் பூச்சு, வண்டு மற்றும் முடி போன்றவை இருக்கின்றன.

    வீரர்களுக்கு மிகவும் சத்தான மற்றும் ஆரோக்கியமான உணவு வழங்கப்பட வேண்டும். ஆனால் இது போன்ற உணவுகளால் வீரர்களின் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படும். சமீபத்தில் வீரர்களுக்கு எடுக்கப்பட்ட ரத்த மாதிரி சோதனையில் உணவு சார்ந்த குறைபாடு இருப்பது தெரிய வந்தது. இது வீரர்கள் சாம்பியன்ஸ் டிராபி மற்றும் உலககோப்பை விளையாட்டுகளில் விளையாடும் போது பாதிப்பை ஏற்படுத்தும். இதனை கருத்தில் கொண்டு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    ஹரேந்திர சிங்கின் கடிதத்திற்கு விளக்கம் அளித்த பத்ரா பெங்களூரு  எஸ்.ஏ.ஐ. மையத்தின் தலைவரிடம் இப்பிரச்சனை குறித்து பேசியதாக கூறினார். விரைவில் இந்த பிரச்சனை தீர்த்து வைக்கப்படும். வீரர்களுக்கு தரமான, ஆரோக்கியமான மற்றும் சுத்தமான உணவுகள் வழங்கப்படும் என கூறினார். #HockeyIndia

    ×